Saturday, December 21, 2013

சீர் கெட்ட சிநேகிதி கிடைத்து விட்டால்



சீர் கெட்ட சிநேகிதி கிடைத்து விட்டால் 
சீரான வாழ்கையும்  சில நாட்களில் 
சிதைந்து விட கூரான வாள் தேவையில்லை 
சிகரட் மட்டுமே போதும் உன்னை கருவறுக்க ,,,

சுவையோடு பருகிட விலைஉயர் விஸ்கி 
புகையோடு புன்னகைத்திட சிகரட் 
அவையோடு கைபேசியில் பதிந்திடும் 
அழகினில் மயங்கிடும் உன் அறிவு ,,,,

நிலை தலை மறந்து இங்கே நீங்கள் 
நிற்பதை நினைக்கையில் உருகுது மனது
வரைமுறை தவறிய வாலிப வாழ்க்கை 
தலை முறை தவறிய நண்பர்கள் சேர்க்கை,,,, 

பெண்ணியத்தை பாடி பெருமை சேர்த்த 
பெரும் புலவர்கள்  செய்த புண்ணியத்தால் 
போய்விட்டார்கள் இன்று இருந்தால் உங்கள் 
கண்ணியத்தை பார்த்து கண் கலங்கி இருப்பார்கள்,,,
,,,,சிவமேனகை ,,,

புகை நமக்கு பகை

புகை நமக்கு பகை 


விருப்போடு பற்ற வைத்து
நெருப்போடு உறவாடும் நெஞ்சங்களே
உதட்டோடு யமனை வைத்து
உயிரோடு போராடும் உறவுகளே ,,,

கருவாக்கி உன்னை உருவாக்கி 
மகவாக்கி மடிமீது தாலாட்டிய தாயும்
மனையாகி வந்து மகிழ்வாக்கி உன்னை
உறவாக்கி உணர்வில் கலந்த உறவும் ,,,
தனியாக நின்று நாளை தவிக்க
தரம் கெட்ட தணியாத தாகம் என
உருவாகி வந்து உயிர் கொல்லும்
உதவாத புகை ஆற்றல் தேவையா ,,,,,
,
,,,சிவமேனகை ,,,,,